உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்துமாறு உலக நாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வேண்டுகோள்.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தாவிடில் உக்ரைனில் இருந்து 70 லட்சம் பேர் புகலிடம் தேட நேரிடும் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலிகா தெரிவித்துள்ளார். 70 லட்சம் பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேட நேரிடும் என்றும் கூறியுள்ளார். உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்துமாறு உலக நாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த வாகனங்கள் அல்லது நடை பயணமாக ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனால் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் கடும் குளிரிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், தாக்குதலை ரஷ்யா நிறுத்தாவிடில் உக்ரைனில் இருந்து 70 லட்சம் பேர் 70 லட்சம் பேர் அகதிகள் ஆவர் என்று தூதர் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…