நோயெதிர்ப்பு சக்தி பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் என்பது வரலாற்றிலேயே கிடையாது – WHO தலைவர் டெட்ரோஸ்!

Published by
Rebekal

நோயெதிர்ப்பு சக்தி பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் என்பது வரலாற்றிலேயே கிடையாது என WHO தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இருப்பினும் ரஷ்யாவில் மட்டுமே இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளும் தடுப்பூசி ஆய்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய வகையிலான மருந்துகளை கூட பல நாடுகள் கண்டுபிடித்து வருகிறது எனவும், அதற்கான தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெறுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனவை தடுக்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போதும் என்பது தொடர்பான கருத்துக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் கருத்து கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய தடுப்பூசிகள் மூலம் வைரஸை கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள், தடுக்க ஒரே வழி இதுதான் எனவும் நினைக்கிறார்கள். ஆனால் அது தீர்வு கிடையாது, நோய் எதிர்ப்பு சக்தி என்பது வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கே. ஆனால் பெரும் தொற்று ஏற்படும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும் என்பது வரலாற்றிலேயே இல்லாத ஒன்று என அவர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

5 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

7 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

8 hours ago