பண பரிமாற்ற திட்டத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் உதவ தயார்.. பதிலடி கொடுத்த இந்திய அரசு!

Published by
Surya

பண பரிமாற்ற திட்டத்தில் இந்தியாவுக்கு உதவுவதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்த நிலையில், அவருக்கு இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கொரோனவால் இதுவரை 1.25 லட்சத்துக்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,463க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது. மேலும் அந்நாட்டில் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக, கடுமையான ஊரடங்கை பிறப்பிக்க அந்நாட்டு அரசு தயக்கம் காட்டி வருகிறது.

மேலும், பாகிஸ்தானில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாகிஸ்தானில் பெரும் நிதிச்சிக்கல் இருக்கும் நிலையில், இந்தியாவில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ தாங்கள் கையாண்ட பணப் பரிமாற்றத் திட்டத்தைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்ததாவது, “பாகிஸ்தானுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90 சதவீத அளவுக்கு கடன் சுமை உள்ளது என்பதை அந்நாடு நினைவு கொள்வது நல்லது. அதே சமயத்தில், கொரோனா பாதிப்புக்கான இந்தியாவின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை காட்டினும் பெரியது” என அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

3 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

3 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

5 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

5 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

7 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

8 hours ago