கொரோனா வைரஸோடு போராடும் இந்தியாவிற்கு 10 மில்லியன் டாலர்களை கனடா வழங்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரசுக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருகிறது. இந்த வைரஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரசால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சில நாடுகள் இந்தியாவிற்கு உதவும் வகையில் பல விதங்களில் உதவி கரம் நீட்டுகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸோடு போராடும் இந்தியாவிற்கு 10 மில்லியன் டாலர்களை கனடா வழங்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் கார்னியோ, தனது இந்தியப் பிரதிநிதி ஜெய்சங்கருடன் நேரடியாக உரையாடினார். அப்போது கூடுதல் மருத்துவ உபகாரணங்களை நன்கொடையாக அளிப்பது உட்பட, என்ன உதவிகள் செய்ய முடியும் என்பது குறித்து பேசினார்கள் என்றும், எங்களால் முடிந்த அனைத்து வகையிலும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்போது 10 மில்லியன் டாலர்களை நாங்கள் வழங்க தயாராக உள்ளோம். இது ஆம்புலன்ஸ் சேவை முதல் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவின் பயங்கரமான மற்றும் சோகமான புகைப்படங்களை பார்க்கும் போது, வருத்தம் அளிக்க கூடியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 60 ஆயிரத்து 960 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…