கொரோனாவை எதிர்த்து போராடும் இந்தியா…! உதவிக்கரம் நீட்டும் பிரான்ஸ்…!

Published by
லீனா

கொரோனா வைரஸோடு போராடும் இந்தியாவிற்கு 10 மில்லியன் டாலர்களை கனடா வழங்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரசுக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருகிறது. இந்த வைரஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரசால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சில நாடுகள் இந்தியாவிற்கு உதவும் வகையில் பல விதங்களில் உதவி கரம் நீட்டுகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸோடு போராடும் இந்தியாவிற்கு 10 மில்லியன் டாலர்களை கனடா வழங்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் கார்னியோ, தனது இந்தியப் பிரதிநிதி ஜெய்சங்கருடன் நேரடியாக உரையாடினார். அப்போது கூடுதல் மருத்துவ உபகாரணங்களை நன்கொடையாக அளிப்பது உட்பட, என்ன உதவிகள் செய்ய முடியும் என்பது குறித்து பேசினார்கள் என்றும், எங்களால் முடிந்த அனைத்து வகையிலும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்போது 10 மில்லியன் டாலர்களை நாங்கள் வழங்க தயாராக உள்ளோம். இது ஆம்புலன்ஸ் சேவை முதல் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

 மேலும், இந்தியாவின் பயங்கரமான மற்றும் சோகமான புகைப்படங்களை பார்க்கும் போது, வருத்தம் அளிக்க கூடியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 60 ஆயிரத்து 960 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

1 hour ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

4 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago