Indian Embassy released Emergency numbers for Earthquake in jappan [File Image]
இன்று 2024 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே ஜப்பானில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் 5.5 என்ற ரிக்டர் அளவு முதல் 7.6 ரிக்டர் அளவு வரை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
இஷிகாவா, நைகட்டா, டொயாமா உள்ளிட்ட கடற்கரையோர நகர மக்கள் சுனாமி எச்சரிக்கை காரணமாக அங்கு வசித்து வந்த மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டனர். இந்த சூழலில், ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் வர தொடங்கியது என பல்வேறு வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம், அங்குள்ள இந்தியர்களுக்கு உதவும்படி அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது . மேலும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி
மேற்கண் உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சலை தொடர்பு கொண்டு தூதரக உதவிகளை நாடலாம் என ஜப்பானில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…