அமெரிக்காவில் வசித்து வரக்கூடிய இந்தியர் கால்சென்டர் நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் வசித்து வரக்கூடிய 34 வயதுடைய இந்தியர் தான் ஹிமான்சு. இவர் நடத்தி வர கூடிய கால் சென்டர் மூலமாக கம்பியூட்டர்களை சரி செய்து தருவதாக அமெரிக்கர்களை குறிவைத்து 5 ஆண்டுகளுக்கு மேலாக இவர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து அமெரிக்காவை சேர்ந்த பலர் இவரது விளம்பரத்தை கண்டு தங்கள் கம்ப்யூட்டரில் பாதிப்பு உள்ளது சரி செய்து தருமாறு கால்சென்டர் மூலமாக அழைக்கும் பொழுது, இவர் அந்த வாடிக்கையாளரிடம் கம்ப்யூட்டரின் பிரச்சனையை சரி செய்வதாக கூறி பெரிய அளவு தொகையை வசூலித்து விட்டு கம்ப்யூட்டரை சரி செய்து விட்டதாக பொய் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு அவர் இந்திய மதிப்பில் இதுவரை 22 கோடி வரை மோசடி செய்துள்ளாராம். இதனால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் ஹிமான்சு செய்துள்ள மோசடி அம்பலமானது. இதனையடுத்து அவர் கடந்த ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
இவர் தனது குற்றத்தை கடந்த டிசம்பர் மாதமே ஒப்புக்கொண்ட நிலையில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த ஹிமான்சு நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹிமான்சுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்த பின்பு அவர் மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…