உக்ரைனில் இந்தியர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப் படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி.
உக்ரைன் மீது ரஷ்யா உக்கிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,எந்த நேரத்திலும் ஆபத்து நிகழலாம் என்று கருதி உக்ரைன் கார்கிவ் பகுதியில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் வெளியேறிய பின்னர் 3 குறிப்பிட்ட பகுதிகளுக்கு வர வேண்டும் என்றும் உக்ரைனில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அவசர அறிக்கை வெளியிட்டிருந்தது.
ஆனால்,சில இடங்களில் இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் உக்ரைன் வீரர்களால் தடுக்கப்பட்டிருந்தார்கள் என்று செய்திகள் வெளியாகியது.இதனால்,அவர்கள் பயனைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில்,உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் யாரும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லை என உக்ரைனில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய மாணவர்களை மீட்டு,அவர்களை தாயகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…
சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி - பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை…
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…