ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க இருப்பிடங்களுக்கு எதிராக தீவிரவாத சதி வேலைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் ஈராக் பாதுகாப்பு படையினர் 14 பேரை சில நாட்களுக்கு முன்னர் ஈராக் ராணுவம் கைது செய்தனர்.
அவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களில் பலர் தற்போது ஜாமீனில் வெளியே விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, ஈராக் அதிகாரிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனராம். அதாவது, ஒரு சிலர் அதிகாரிகள் 14 பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மூன்று நபர்கள் சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், சில அதிகாரிகள் 14 பேரில் ஒருவரை தவிர மற்ற 13 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளனராம்.
மேலும், இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து ஈராக் இராணுவம், உள்துறை அமைச்சகம் மற்றும் ஈராக் பாதுகாப்பு படையினர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா, ஈராக் மீது குற்றம் சாட்டி வருகிறது. அதாவது, அமெரிக்க தூதரகத்தின் மீதான தீவிரவாத சதி வேலைகளின் பின்னால் ஈராக் ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. குற்றவாளிகளை இதுவரை அடையாளம் கண்டு ஈராக் ராணுவம் கைது செய்யவில்லை எனவும் ஈராக் அரசாங்கத்தை விமர்சித்து வருகிறது.
ஆனால், அமெரிக்க தூதரகம் மீதான தீவிரவாத சதி வேலைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கையானது ஈராக் நாட்டில் உள்ள தீவிரவாதத்திற்கு எதிரான சட்டத்தின்படியே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என ஈராக் உளவுத்துறை புலனாய்வு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…