palestine - israel [file image]
சென்னை: ஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
கடந்த ஆண்டு தொடங்கிய இந்த போர் இன்னும் ஓயவில்லை. ஹமாஸ் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடு அங்கீகாரம் செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அயர்லாந்து, நார்வே நாடுகளுக்கான தனது தூதர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது இஸ்ரேல். ஆனால், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய மக்களுக்கு அமைதியை உறுதி செய்வதற்கு இந்த மூன்று நாடுகளும் இந்த நடவடிக்கை அவசியமானதாகக் கருதுகின்றன.
இதுவரை இஸ்ரேலுக்குள் ஹமாஸ் தாக்குதலின் போது சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், 250 பேர் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்னர் என்றும், அவர்களில் 120 பேர் காஸாவில் உள்ளனர். அதே நேரத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் போது 35,000 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், கிட்டத்தட்ட 80,000 பேர் காயமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்தை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன. இதற்கு கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராகச் சேர்ப்பது குறித்த அறிக்கை மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதில், 193 நாடுகள் உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா சபையில், இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவளித்தன. ஆனால், இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெரும்பான்மை ஆதரவின் காரணமாக பாலஸ்தீனம் ஐ.நா சபையில் முழு நேர உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…