முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு வெளியில்செல்வதற்கான ஒரு தன்னம்பிக்கையே வராது. இந்நிலையில் பருக்களை போக்குவதற்கான வழிகள் தேடி செயற்கை முறையில் கண்டுபிடிக்கப்பட்ட முகப் பூச்சுகள் மற்றும் கிரீம்களை உபயோகித்து அதன் மூலம் அதிகமான பிரச்சனைகள் தான் இழுத்து வைப்பவர்கள். ஆனால், இயற்கை கொடுத்துள்ள பொருட்கள் மூலமாகவே நம்முடைய முகத்தில் உள்ள பருக்களை நீக்கி முகம் பொலிவுடன் பளபளப்பாக இருக்க செய்யலாம். அதற்கு எதுவும் தேவையில்லை கடலை மாவு மட்டும் போதும்.
கடலை மாவு மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் சாறு.
ஒரு கிண்ணத்தில் கடலைமாவை எடுத்துக் கொண்டு அதனுடன் தேவையான அளவு கடலை மாவு நன்றாக தோசை மாவு பதத்திற்கு வரும் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவேண்டும். கிளறிய பின்பு அதை முகத்தை கழுவிவிட்டு ஈரப்பதமான நம்முடைய முகத்தில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பூசி வந்தால் நிச்சயமாக முகத்தில் உள்ள பருக்கள் குறைந்து முகம் பொலிவு பெறும். அதன் பின்பும் அதிகமாக பரு இருப்பவர்கள் தொடர்ந்து 3 வாரத்துக்கு உபயோகித்து வர முகபருக்கள் அழிந்து முகத்தில் உள்ள தழும்புகள் குறைய ஆரம்பிக்கும். இதற்கு நாம் அதிக விலை கொடுத்து க்ரீம்களை வாங்கி உபயோகிக்க தேவையில்லை, எளிய இயற்கை முறையாகிய இதை உபயோகித்துப் பாருங்கள்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…