பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டியை மரியாதை குறைவாக பேசியதற்காக பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தினமும் வாக்குவாதங்களும் , சண்டைகளும் என்று சுவாரசியமாக போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தந்திரமாக விளையாடும் போட்டியாளர் பாலாஜி .
அதற்கு உதாரணமாக முதல் வாரத்தில் அம்மா, அம்மாவை குறித்து தவறாக கூறிய பாலாஜி அடுத்த சில தினங்களில் மாற்றி பேசியுள்ளார் . இது பலர் மத்தியில் அவரிடம் இருந்த நம்பிக்கையை இழக்க செய்துள்ளது . இந்த நிலையில் சமீபத்தில் பாலாஜி மற்றும் சனம் ஷெட்டிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சனம் அவர்களை தரக்குறைவாக பேசியதற்காக பாலாஜி அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் .
இந்த தகவல் வதந்தி என்றும் சிலர் கூறுகின்றனர் . ஆனால் கடந்த 2 சீசனிலும் பெண்களை மரியாதை குறைவாக பேசியதற்காக சரவணன் மற்றும் மகத் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பாலாஜி மற்ற பெண்களிடம் மரியாதை செலுத்துவதாகவும்,சனம் ஷெட்டி தூண்டியதாலையே பாலாஜி உணர்ச்சி வசப்பட்டதாகவும் பாலாஜி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் . பாலாஜி வெளியே செல்கிறாரா இல்லையா என்பதை வரும் தினங்களில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…