இரவு நேரத்தில் பெரும்பாலும் பலர் வீட்டில் சாதம் மீதமாக இருப்பது வழக்கம் தான். ஆனால் சிலருக்கு குளிர்ந்த சாதத்தை சாப்பிடுவது பிடிக்காது. எனவே தேவையில்லாமல் அதை கொட்ட வேண்டிய நிலை ஏற்படும். இருந்தாலும் சாதத்தை கொட்டி விட்டோமே என்ற கவலையும் பலருக்கு இருக்கும். இனிமேல் சாதத்தை தயவுசெய்து வீணாக்காதீர்கள். இந்த பழைய சாதத்தை வைத்து எப்படி அட்டகாசமான சுவையில் தோசை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
அரைக்க : முதலில் பழைய சாதம் 2 கப் அளவு எடுத்து, அதை மிக்சியில் சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் தோல் நீக்கிய உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தாளிப்பு : கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
மாவுக் கலவை : நாம் அரைத்து எடுத்து வைத்துள்ள மாவுடன் சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து, பொடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு நாம் தாளித்து வைத்துள்ளதை இந்த மாவில் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும்.
தோசை : இறுதியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து, சூடேறியதும் தோசை மாவை ஊற்றி கொள்ளவும். பின்பு மாவின் மீது பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் கேரட் ஆகியவற்றைத் தூவி பொன்னிறமாக இருபுறமும் வரும் வரை சுட்டு எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் அட்டகாசமான பழைய சாதம் தோசை தயார்.
நிச்சயம் ஒருமுறை செய்து பாருங்கள். இது பழைய சாதத்தில் செய்தது என்பது கூட தெரியாத அளவிற்கு அட்டகாசமான சுவையுடன் இருக்கும்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…