பெரும்பாலும் அனைவரும் வீட்டிலேயே கரப்பான் பூச்சி தொல்லை இருப்பது வழக்கம் தான். குறிப்பாக சமையலறை, குளியலறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இவை காணப்படும். மேலும் சிலர் இந்த கரப்பான் பூச்சிகள் கண்டு பயப்படவும் செய்வார்கள்.
இந்த பூச்சிகள் காரணமாக நமது உடல் நலமும் பாதிக்கப்படும். உங்கள் வீட்டிலும் இந்த கரப்பான் பூச்சி தொல்லை அதிக அளவில் இருந்தால், தீங்கு விளைவிக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தாமல் எப்படி இந்த கரப்பான் பூச்சியை ஒழிப்பது என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
குளியலறை மற்றும் சமையலறைகளில் உள்ள கரப்பான் பூச்சிகளை போக்குவதற்கு பேக்கிங் சோடா பெரிதும் பயன்படுகிறது. பேக்கிங் சோடாவை கரப்பான் பூச்சி அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் லேசாகத் தூவி விடவும். இதன் அடர்த்தியான வாசனை காரணமாக கரப்பான்பூச்சிகள் வீட்டிற்குள் நுழைய முடியாது.
வடிகாலில் கரப்பான் பூச்சிகள் இருப்பதாக உணர்ந்தால் இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கரைத்து இந்த கலவையை வடிகாலில் வைத்து விடவும். இதனால் அப்பகுதியில் உள்ள கரப்பான்கள் இறந்து விடும்.
போரிக் அமிலத்தின் உதவியுடன் நீங்கள் கரப்பான் பூச்சியை ஒழிக்க முடியும். சமையலறையின் மறைவான பகுதிகள் மற்றும் குளியலறையின் வடிகால் பகுதிகளில் இதனை வைத்தால் கரப்பான் பூச்சி ஒழிந்து விடும்.
கரப்பான் பூச்சிகளை வீட்டிலிருந்து அகற்ற வெள்ளை வினிகரைப் பயன்படுத்தலாம். சம அளவு வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கரப்பான் பூச்சி உள்ள பகுதிகளில் தெளிக்கவும். கரப்பான் பூச்சிகள் வினிகரில் வாசனை காரணமாக இறந்து விடும்.
உங்கள் சமையலறை மற்றும் குளியலறை பகுதியிலுள்ள வடிகால்களில் கொதிக்கும் நீரை ஊற்றினால் அப்பகுதியிலுள்ள கரப்பான் பூச்சி இறந்துவிடும்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…