நாம் பொதுவாகவே கொண்டைக்கடலையை அவித்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நாம் பொதுவாகவே கொண்டைக்கடலையை அவித்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையானபொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கொண்டைக்கடலையை நீங்கள் இந்த ரெசிபி செய்வதற்கு முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் காலையில் ஊற வைத்த கொண்டைக்கடலையை மிக்சியில் போட்டு, அதனுள் சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, பச்சை மிளகாய் ஒன்று, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பாக அதை தனியாக ஒரு பௌலில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் மீண்டும் ஒரு பெளவுலில் அரிசி மாவு அரை கப் எடுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும்.
இந்த மாவை கொண்டை கடலை கலவையில் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பில் தோசை சுடும் பாத்திரத்தை வைத்து, அதனுள் தோசை ஊற்றி தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தோசை நமது உடலுக்கு பல வகையான சத்துக்களை வழங்குவதோடு, வித்தியாசமான முறையில், நம் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கும்போது அது அவர்களுக்கு பிடித்தமானதாகும். இந்த தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, பூண்டு சட்னி என எதை வைத்து சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக காணப்படும். இப்போது கொண்டைக்கடலை தோசை தயார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…