ஜெர்மனிலுள்ள பிரபல ஏர்பஸ் நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய 21 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு பணியாற்றிய 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா வைரஸின் தாக்கத்தில் உலகிலுள்ள பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், பல கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக புதிய கொரோனா வைரஸும் சேர்த்து மக்களை பாடாய் படுத்துகிறது. எனவே ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் மிக எச்சரிக்கையுடனும், கட்டுப்பாடுகளுடனும் தான் மக்கள் வெளியில் நடமாடுகின்றனர்.
ஆனால், ஜெர்மனிலுள்ள பிரபல நிறுவனமாகிய ஏர்பஸ் நிறுவனத்தின் கீழ் பணியாற்றக்கூடிய 21 தொழிலாளர்களுக்கு புதியவகை கொரோனா வைரஸின் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியாற்றிய 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். தங்கள் பரிசோதனை செய்தவர்களை தான் அனுமதித்து பல சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் அந்நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், கொரோனா பரவலுக்கான காரணம் தங்களுக்கு தெரியவில்லை என சுகாதார அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…