பிரபல தமிழ் நடிகரின் வீட்டில் ஒட்டப்பட்ட தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர்.!

Published by
Ragi

ராதாரவியின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4வது கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும் பிரதமர் மோடி நேற்றைய உரையில் அறிவித்திருந்தார். சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. அது மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்தவர்களையும்  கொரோனா  பரிசோதனை செய்யவும், கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லையென்றாலும் அவர்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் பல தமிழ் திரைப்படங்களில் நடித்த ராதாரவி நீலகிரி மாவட்டத்தில்  கோத்தகிரியில் உள்ள சொந்த வீட்டில் தனது 8 உறவினர்களுடன் கடந்த 10ம் தேதி வந்துள்ளார். உடனே அந்த பகுதி மக்கள் கோத்தாகிரி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்த நிலையில், ராதாரவியின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் அவர்கள் யாவரையும் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதோடு, ராதாரவியின் வீட்டின் முன்பு தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கரையும் ஒட்டியுள்ளனர். இதனால் கோத்தாகிரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Published by
Ragi

Recent Posts

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

21 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

58 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

2 hours ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago