ரூ.80,000 சம்பளத்துக்கு விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு.! மத்திய அரசு அறிவிப்பு..!

Published by
பாலா கலியமூர்த்தி

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியான 300 பணியிடங்களை நிரப்படவுள்ளது. இப்பணியிடங்கள் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும்  கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டுத்துறை : தடகளம், குத்துசண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், ஹண்ட் பால், கால்பந்து, ஹாக்கி, கபடி, ஜூடோ, நீச்சல், துப்பாக்கி சுடுதல், வாலிபால், பளுதூக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு காலியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கல்வி நிறுவனங்களின் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் விளையாடிருக்க வேண்டும். வயது வரம்பு 1-08-2019 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். 02-08-1996 முதல் 01–08-2001-ஆம் தேதிக்குள் பிறந்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையிலும், மேலும் கூடுதல் படிகள் வழங்கப்படும்.

உடற்தகுதி : ஆண்கள் குறைந்தபட்சம் 167 செ.மீ உயரமும், பெண்கள் 153 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : சம்சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் திறமை, எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை : http://www.davp.nic.in – என்னும் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். ( விளையாட்டு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது).

விண்ணபக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி ரூ.100. பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பதாரர்களுக்கு கடைசி தேதி 17-12-2019 ஆகும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

10 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

10 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

11 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

11 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

12 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

12 hours ago