சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிகை ஜோதிகா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக பி. வாசு கூறியிருந்தார். கதாநாயகனாக அந்த படத்தில் முன்னணி ஹீரோ ராகவா லாரன்ஸ் தான் நடிக்க வுள்ளார். மேலும் லாரன்ஸிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாக தகவல் வெளியானது மேலும் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் இதில் வேட்டையனாக நடிக்கவுள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்திலும் ஜோதிகாவை நடிக்க வைக்க கோரி அவரை அணுகியதாக கூறப்படுகிறது. மேலும் ஜோதிகா இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒன்று சந்திரமுகியாகவும், மற்றொன்று முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த செய்தி வதந்தியா இல்லையா என்று கூறி படக்குழுவினர் தரப்பிலிருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…