வெற்றிபெற்றால் இன வெறி வன்முறைகளை கட்டுப்படுத்துவேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக அமெரிக்க வாழ் இந்திய பெண்மணியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் நாட்கள் குறைவாக உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.டிரம்ப் மற்றும் பைடன் இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே அமெரிக்காவின் மிச்சிகன் ( Michigan ) மாகாணத்தில் ஜனநாயக கட்சியின் சார்பாக பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் அந்த கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் பேசுகையில்,தேர்தலில் வெற்றிபெற்றால் ,நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பேன்.மேலும் இன வெறியர்களின் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.ஆகவே இன வெறி வன்முறைகளை கட்டுப்படுத்துவேன். மேலும் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மேலாதிக்கத்தை உயர்த்த ஊக்குவித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…