ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் கொடியை அகற்றி பத்திரிகையாளர் கைது

Published by
Rebekal
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் தத்யால் எனும் நகரில் பாகிஸ்தான் கொடியை அகற்றிய பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் தத்யால் எனும் நகர் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதன் பொது இடத்தில் பாகிஸ்தான் நாட்டின் தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலரும் பத்திரிகையாளரும் ஆகிய தன்வீர் அகமது என்பவர் கடந்த சில நாட்களாகவே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும் அந்த கொடியை அகற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்து இருந்ததுடன், உண்ணாவிரதம் இருந்தும் அவர் போராட்டம் நடத்தியுள்ளார். ஆனால் இந்த பகுதி நிர்வாகம் கொடியை இறக்க முன்வராததால் அகமது அந்தக் கொடியை தானாகவே அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அகமதுவே வெளியிட்டுள்ள வீடியோவில், பாகிஸ்தானின் தேசிய கொடியை நான் தான் அகற்றினேன். இதனால் உளவு அமைப்புகள் என்னை பின்தொடர தொடங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும், சதுக்கத்தில் இருந்த இரண்டாவது பாகிஸ்தான் தேசியக் கொடியையும் சுவரில் ஏறி அவர் அப்புறப் படுத்தி உள்ளார். இதனால் பாகிஸ்தானிய அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு படையினர் அவரைக் கைது செய்து துன்புறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Published by
Rebekal

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

21 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

35 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

1 hour ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

1 hour ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago