உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவிய கொரோனா தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில்,ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து,தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருவதையடுத்து கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து காணப்பட்டது. ஆனால்,கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே,உலக பணக்காரர்களில் ஒருவரும்,மைக்ரோசாஃப்ட் இணை நிறுவன தலைவருமான பில்கேட்ஸ் கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு,குறிப்பாக தடுப்பூசிகள் மற்றும் ஏழை நாடுகளுக்கான கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கும் அணுகலுக்கான ஆதரவாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில்,மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி,லேசான அறிகுறிகளுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் பில்கேட்ஸ் கூறியதாவது:
“எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.நான் லேசான அறிகுறிகளை அனுபவித்து வருகிறேன்.நான் மீண்டும் ஆரோக்கியமாக இருக்கும் வரை தனிமைப்படுத்துவதன் மூலம் நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றுகிறேன்.நான் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி பெற்ற அதிர்ஷ்டசாலி மற்றும் சிறந்த மருத்துவ பராமரிப்புக்கான அணுகலைப் பெற்றுள்ளேன்.”,என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,”கேட்ஸ் அறக்கட்டளை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இன்று ஒன்றிணைகிறது.மேலும் அனைவரையும் பார்க்க குழுவில் இருப்பதில் தான் அதிர்ஷ்டசாலி மற்றும் அவர்களின் கடின உழைப்புக்கு நன்றி.இதனைத் தொடர்ந்து,நாங்கள் கூட்டாளர்களுடன்(partners) தொடர்ந்து பணியாற்றுவோம், மேலும் எங்களில் யாரும் மீண்டும் ஒரு தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்”,என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…