அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ்!

Published by
Surya

அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன்பதவியேற்கவுள்ள நிலையி, துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றார்.

அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக வந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். மேலும், பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம், கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப்பொழுது டிரம்ப் ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்தி, வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டோரை அமெரிக்க புலனாய்வு போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினார்கள்.

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போது நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவு பிரிவு எச்சரித்துள்ளதை தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டிடம் முழுவதுமே பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனைதொடர்ந்து, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பதவியேற்கும் விழா தற்போது தொடங்கியுள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், மைக் பென்ஸ் உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றார். அதனைதொடர்ந்து, பைடன் பதவியேற்கவுள்ளார்.

Published by
Surya

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

8 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

8 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

9 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

10 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

10 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

11 hours ago