நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படமும் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாவதாக தகவல்.
கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படமும் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படமும் வெளியானது. இரண்டு திரைப்படங்களும் நல்ல வசூல் சாதனை செய்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்பொழுது இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் சுல்தான். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்து விட்டததாக கார்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைபோல் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் மீண்டும் நடிகர் கார்த்தி திரைப்படமும் விஜய் படமும் ஒரே நாளில் வெளியவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் கடந்த ஆண்டு கார்த்தியின் கைதி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…