கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களாக வடகொரிய அதிபர் கிம் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரின் உடல்நிலை தற்பொழுது கவலைக்கிடத்தில் உள்ளதாகவும், தெரிவித்து வந்தனர். மேலும், பொது இடங்களில் அவர் தென்படாததால், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் அதனை பொய் என நிருப்பித்து, அவர் ஒரு தொழிற்சாலையை திறக்கும் புகைப்படம் வெளியானது. இதனையடுத்து, அதுமட்டுமின்றி, அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும், அவரின் ஆட்சி அதிகாரத்தை அவரின் தங்கையிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், அவரின் தங்கை ஆட்சியை நிர்வகித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
அது பொய் என நிரூபிக்கும் விதமாக, வடகொரியாவில் கடந்த சில தினங்களுக்கு முன், மழை மற்றும் சூறாவளியின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதில் பொதுமக்களும் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுடன் பேசினார். அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
வடகொரியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும், விவசாயிகளுடன் பேசும்போது மாஸ்க் அணியாமல் பேசினார். அதுமட்டுமின்றி அந்த புகைப்படத்தில் கிம் ஜாங் சுறுசுறுப்பாக இருந்தார். இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் எனவும், அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…