தேங்காயை உடைக்கும் போது வரக்கூடிய தேங்காய் நாரை கழிவு என்று தூக்கி எறிவதுண்டு. அந்த தேங்காய் நாரில் பல வகையான நன்மைகள் உள்ளது.
நாம் நமது வீடுகளில், தினமும் சமையலின் போது தேங்காயை பயன்படுத்துவதுண்டு. இந்த தேங்காயை உடைக்கும் போது வரக்கூடிய தேங்காய் நாரை கழிவு என்று தூக்கி எறிவதுண்டு. ஆனால், இந்த தேங்காய் நாரில் பல வகையான நன்மைகள் உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.
தேங்காய் நாரை எடுத்து, அதை இரண்டு கைகளாலும் உதிர்க்க வேண்டும். அப்படி உதிர்க்கும் போது வரக் கூடிய துகள்களை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்து வைத்துள்ள துகள்களை, நாம் வளர்க்க கூடிய செடிகளுக்கும் போட்டு விட வேண்டும்.
இவ்வாறு போடுவதால், நாம் வெளியே சென்றாலும், யாரிடமும் செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என சொல்லிவிட்டு செல்ல வேண்டாம். ஏனென்றால், நாம் செடியை சுற்றி போட்டிருக்கும் இந்த துகள்களோடு, ஒருமுறை தண்ணீர் ஊற்றி விட்டு சென்றாலே, நீண்ட நாட்களுக்கு தண்ணீர் பசை இருப்பது போல இருக்கும்.
தேங்காய் நார்களை மாலை வேளையில் கொளுத்தி விட்டால், அந்த வாசனைக்கு கொசு தொல்லை இருக்காது. பின் நாம் பாத்திரம் கழுவ, அதற்கென்று விலை கொடுத்து ஸ்கிரப்பர் வாங்காமல், அந்த தேங்காய் நார்களை சுருட்டி எடுத்து வைத்துக் கொண்டால் அவற்றை கொண்டு பாத்திரம் கழுவலாம். அவ்வாறு கழுவும் பொது, கறைகள் எல்லாம் போய்விடுகிறது. மேலும், இந்த நார்களில் கிருமிகளை அழிக்கக் கூடிய ஆற்றலும் உள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…