தேங்காயை உடைக்கும் போது வரக்கூடிய தேங்காய் நாரை கழிவு என்று தூக்கி எறிவதுண்டு. அந்த தேங்காய் நாரில் பல வகையான நன்மைகள் உள்ளது.
நாம் நமது வீடுகளில், தினமும் சமையலின் போது தேங்காயை பயன்படுத்துவதுண்டு. இந்த தேங்காயை உடைக்கும் போது வரக்கூடிய தேங்காய் நாரை கழிவு என்று தூக்கி எறிவதுண்டு. ஆனால், இந்த தேங்காய் நாரில் பல வகையான நன்மைகள் உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.
தேங்காய் நாரை எடுத்து, அதை இரண்டு கைகளாலும் உதிர்க்க வேண்டும். அப்படி உதிர்க்கும் போது வரக் கூடிய துகள்களை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்து வைத்துள்ள துகள்களை, நாம் வளர்க்க கூடிய செடிகளுக்கும் போட்டு விட வேண்டும்.
இவ்வாறு போடுவதால், நாம் வெளியே சென்றாலும், யாரிடமும் செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என சொல்லிவிட்டு செல்ல வேண்டாம். ஏனென்றால், நாம் செடியை சுற்றி போட்டிருக்கும் இந்த துகள்களோடு, ஒருமுறை தண்ணீர் ஊற்றி விட்டு சென்றாலே, நீண்ட நாட்களுக்கு தண்ணீர் பசை இருப்பது போல இருக்கும்.
தேங்காய் நார்களை மாலை வேளையில் கொளுத்தி விட்டால், அந்த வாசனைக்கு கொசு தொல்லை இருக்காது. பின் நாம் பாத்திரம் கழுவ, அதற்கென்று விலை கொடுத்து ஸ்கிரப்பர் வாங்காமல், அந்த தேங்காய் நார்களை சுருட்டி எடுத்து வைத்துக் கொண்டால் அவற்றை கொண்டு பாத்திரம் கழுவலாம். அவ்வாறு கழுவும் பொது, கறைகள் எல்லாம் போய்விடுகிறது. மேலும், இந்த நார்களில் கிருமிகளை அழிக்கக் கூடிய ஆற்றலும் உள்ளது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…