உங்கள் முகத்தை இளமையாக வைத்திருக்க இந்த 4 குறிப்புகளை தெரிஞ்சிக்கோங்க…!

Published by
Rebekal

நமது சருமம் வயது முதிரும் பொழுது தானாகவே முதிர்ந்த ஒரு சுருங்கிய தோல்களை உடைய தோற்றத்தை பெறுவது வழக்கம் தான். ஆனால் யாருமே நாம் இளமையான தோற்றத்தில் இருந்து உடனடியாக முதிர் வயதுக்கு மாறிவிட வேண்டும் என்று விரும்புவதில்லை. அனைவருமே இளமையாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம்.

இதற்கான சில இயற்கையான வழிமுறைகளை நாம் தொடர்ச்சியாக பயன்படுத்தும் பொழுது நாம் முதுமை அடைவது தாமதமாகும். இன்று என்ன இயற்கையான அழகு சாதனங்களை நமது முகத்தில் பயன்படுத்தும் பொழுது நமது முகம் இளமைத் தோற்றத்தைத் தருகிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

முருங்கை கீரை

நன்மைகள் : முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுகிறது. இது நமது தோல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. மேலும் இந்த முருங்கைக்கீரையை நாம் சாப்பிடுவதே நமது தோல்களுக்கு மிகவும் நல்லது.

உபயோகிக்கும் முறை : முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் அழுக்குகள், சரும சுருக்கங்களை நீக்குவதற்கு இந்த முருங்கைக்கீரையில் பேஸ்ட் செய்து முகத்தில் தடவினால், நல்ல பலன் கிடைக்கும்.

அஸ்வகந்தா

நன்மைகள் : அஸ்வகந்தா முக சுருக்கங்களை நீக்கும் ஒரு சிறந்த ஒரு உணவு. இது பல நோய்களை தடுப்பதற்கும் உதவுகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு இது உதவுகிறது. நமது முதிர்ந்த தோற்றத்தை மாற்றுவதற்கும், அஸ்வகந்தா பெரிதும் பயன்படுகிறது. இவை நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை புத்துணர்ச்சியுடனும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : அஸ்வகந்தா மற்றும் அதன் உலர்ந்த பழங்களை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் இரவு தூங்குவதற்கு முன்பு சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது.

வேப்ப மர வேர்

நன்மைகள் : வேப்ப மர வேரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளது. இது நமது சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள சுருக்கங்களையும், கோடுகளையும் நீக்குவதற்கும் இது உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : வேப்ப எண்ணெயுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். மேலும் நீங்கள் விரும்பினால் இதனுடன் யூகலிப்டஸ் எண்ணெயையும் கலந்து பயன்படுத்தலாம்.

நெல்லிக்காய்

நன்மைகள்: இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நமது சருமத்தை பிரீ ரேடிக்கல் செல்களிலிருந்து பாதுகாக்கிறது. இதை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலமாக நமது சருமம் பளபளப்பாக மாறும். தோல் சுருக்கங்கள் நீங்கவும் உதவுகிறது.

உபயோகிக்கும் முறை: சுருக்கங்கள் நீங்கி தோல் பளபளப்பாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது நல்லது.

Published by
Rebekal

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

1 hour ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

1 hour ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

2 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

2 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago