இலங்கையையும் குறி வைத்து தாக்கும் வெட்டுக்கிளிகள். வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்.
கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாக்கிய சூறாவளியால், அங்கு வெட்டுக்கிளிகளின் பெருக்கம் அதிகமானது. ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, சோமாலியா, கென்யா ஆகியவை வழியாக இரான், அங்கிருந்து பாகிஸ்தான் வந்து தற்போது இந்தியாவுக்குள் நுழைந்தன.
இந்த பாலைவன வெட்டுக்கிளிகள், இந்த வெட்டுக்கிளிகள் ஈரப்பதமான பகுதிகளில் கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய வடமேற்கு மாநிலங்களில் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் அங்குள்ள பயிர்கள் அனைத்தையும் நாசம் செய்துள்ளது.
இந்தியாவை தொடர்ந்து, தற்போது இந்த வெட்டுக்கிளிகள் இலங்கையையும் குறி வைத்து தாக்க துவங்கியுள்ளது. இலங்கையில் வடமேல் மாகாணத்தில் உள்ள குருநாகல் மாவட்டத்தில், வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த வெட்டுக்கிளிகள், அங்கு பயிரிடப்பட்டுள்ள சோளம், மா, கொய்யா போன்ற பயிர்களை சேதம் செய்துள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், வெட்டுக்கிளிகளை பூச்சி மருந்து தெளித்து விரட்டும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…