Long March-8: புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது சீனா.!

Published by
பாலா கலியமூர்த்தி

சீன விண்வெளி ஆய்வு மையம் ‘லாங்க் மார்ச் 8’ என்ற புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீனா, லாங்க் மார்ச் 8 என்ற ஒரு புதிய ராக்கெட்டை உருவாகியுள்ளது. இந்த புதிய ராக்கெட் 4.5 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டது என தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சீன விண்வெளி ஆய்வு மையம் நேற்று ஹைனான் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து புதிய ‘லாங்க் மார்ச் 8’ ராக்கெட் மூலம் 5 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது.

இந்த புதிய ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு சோதித்த நிலையில், 5 செயற்கைகோள்களுடன் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட் 50.3 மீட்டர் (165 அடி) நீளம் கொண்டது, 3.35 மீட்டர் விட்டம் கொண்ட மைய நிலை மற்றும் 2.25 மீட்டர் விட்டம் கொண்ட இரண்டு பக்க பூஸ்டர்களைக் கொண்டுள்ளது. இந்த ராக்கெட்டின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு எதுவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவின் ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான சீனா அகாடமி ஆஃப் லாஞ்ச் வாகன தொழில்நுட்பம் தான் லாங்க் மார்ச் தொடரின் ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த லாங் மார்ச் தொடரிலிருந்து சீனா 350 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை இதுவரை ஏவியுள்ளது. புதிய லாங் மார்ச் -8 மாடல் “ஸ்பேஸ்எக்ஸ் பால்கான் 9 இன் சீன பதிப்பு” என்று அழைக்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

1 hour ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

1 hour ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

2 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

4 hours ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

4 hours ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

4 hours ago