நடிகர் மாதவன் தனி ஒருவனாக விமானத்தில் படப்பிடிப்புக்காக சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் மாதவன் திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆவார். இவர் தற்போது கல்பேஷ் இயக்கி வரும் ‘அம்ரிகி பண்டிட்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருவதால், இவர் கடந்த மாதம் 26 ஆம் தேதி இந்தியாவிலிருந்து துபாய் சென்றுள்ளார்.
அப்போது விமானம் இவருக்கு ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏனென்றால் இந்த விமான பயணத்தில் தனி ஒருவராக மற்ற பயணிகள் யாரும் இல்லாமல் இவர் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணம் இவர் மறக்க முடியாத பயணங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த வீடீயோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, இது வேடிக்கையாக இருந்தாலும், சோகமாகவும் உள்ளது. இந்த நிலைமை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போது தான் அன்பானவர்கள் அருகில் இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…