ரிஷிகபூர் சாரின் மரணம் குறித்து கேட்டதும் மனம் உடைந்து விட்டது. நம் சினிமாயுலகில் ஈடு செய்ய இயலாத மற்றொரு இழப்பு என்று மகேஷ் பாபு ட்வீட் செய்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள சர். ஹெச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் பாலிவுட் இளம் நடிகரான ரன்பீர் கபூரின் தந்தையாவார். இவர் ஏற்கனவே புற்று நோய்க்கு நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரிஷிகபூர் சாரின் மரணம் குறித்து கேட்டதும் மனம் உடைந்து விட்டது. நம் சினிமாயுலகில் ஈடு செய்ய இயலாத மற்றொரு இழப்பு. ஒரு முழுமையான பொழுதுபோக்கு மற்றும் சொல்ல முடியாத அளவிற்கு திறமையான நடிகர் மற்றும் உண்மையான லெகன்ட். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ரன்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலத்தையும் அளிக்க வேண்டுகிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…