துல்க்கருக்கு ஆதரவாக பேசிய பிரபல இயக்குநர்..!

Published by
Ragi

துல்க்கர் சல்மான், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். இந்த நிலையில் இவர் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான வரனே அவாஷ்யமுண்ட் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை படத்தை தற்போது ஆன்லைனிலும் வெளியிடப்பட்டுள்ளது.இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாயின் பெயர் பிரபாகரன் என்று வைத்து அழைக்கப்பட்டது. இந்த காட்சிக்கு தமிழ் மக்கள் மத்தியில் துல்க்கருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு நிலவி வந்தது மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். அதனையடுத்து அவர் தமிழ் மக்கள் அனைவரிடமும் தனது நியாயத்தை விளக்கி மன்னிப்பு கேட்டிருந்தார். மேலும் பல பிரபலங்கள் இவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். அந்த வகையில் கல்யாண சமையல் சாதம், நிபுணன், அச்சமுண்டு அச்சமுண்டு படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் துல்க்கருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், வரனை ஆவிஷமுண்டோ படத்தில் பிரபாகரனை தவறாக வேண்டுமென்றே சித்தரிக்கவில்லை, இந்த பிரச்சினை தேவையற்றது மலையாள படங்களில் தமிழர்களை மோசமான முறையில் சித்தரிப்பதாக பலர் கூறியுள்ளனர். அது முற்றிலும் தவறானது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியான கும்பளங்கி நைட்ஸ் திரைப்படத்தில் தமிழ் கதாபாத்திரத்தை மிகவும் கண்ணியமாக காட்டியுள்ளனர். ஆனால் பல தமிழ் திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட வழியில் உடையணிந்த மலையாள பெண்கள் மீது இழிவான கருத்துக்களை கொண்டு சித்தரித்துள்ளனர். ஒரு சில தமிழ் படங்களில் மலையாள நடிகையான ஷகீலாவை ஒப்பிட்டு வசனங்களும் உள்ளன.. மேலும் பிரபாகரன் என்று ஒரு நாய்க்கு பெயரிடப்படுவதால் ஏன் ஒருவர் புண்பட வேண்டும். அவர்களின் லாஜிக் படி பார்த்தால், என்ன கொடுமை சரவணா என்ற டயலாக் கடவுள் முருகனை கேலி செய்வதா, இது இந்த ஊரடங்கு காலத்தில் சலித்து இருக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட தேவையற்ற சர்ச்சையை தவிர வேறொன்றுமில்லை என்று கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

2 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

10 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

12 hours ago