துல்க்கருக்கு ஆதரவாக பேசிய பிரபல இயக்குநர்..!

Published by
Ragi

துல்க்கர் சல்மான், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். இந்த நிலையில் இவர் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான வரனே அவாஷ்யமுண்ட் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை படத்தை தற்போது ஆன்லைனிலும் வெளியிடப்பட்டுள்ளது.இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாயின் பெயர் பிரபாகரன் என்று வைத்து அழைக்கப்பட்டது. இந்த காட்சிக்கு தமிழ் மக்கள் மத்தியில் துல்க்கருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு நிலவி வந்தது மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். அதனையடுத்து அவர் தமிழ் மக்கள் அனைவரிடமும் தனது நியாயத்தை விளக்கி மன்னிப்பு கேட்டிருந்தார். மேலும் பல பிரபலங்கள் இவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். அந்த வகையில் கல்யாண சமையல் சாதம், நிபுணன், அச்சமுண்டு அச்சமுண்டு படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் துல்க்கருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், வரனை ஆவிஷமுண்டோ படத்தில் பிரபாகரனை தவறாக வேண்டுமென்றே சித்தரிக்கவில்லை, இந்த பிரச்சினை தேவையற்றது மலையாள படங்களில் தமிழர்களை மோசமான முறையில் சித்தரிப்பதாக பலர் கூறியுள்ளனர். அது முற்றிலும் தவறானது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியான கும்பளங்கி நைட்ஸ் திரைப்படத்தில் தமிழ் கதாபாத்திரத்தை மிகவும் கண்ணியமாக காட்டியுள்ளனர். ஆனால் பல தமிழ் திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட வழியில் உடையணிந்த மலையாள பெண்கள் மீது இழிவான கருத்துக்களை கொண்டு சித்தரித்துள்ளனர். ஒரு சில தமிழ் படங்களில் மலையாள நடிகையான ஷகீலாவை ஒப்பிட்டு வசனங்களும் உள்ளன.. மேலும் பிரபாகரன் என்று ஒரு நாய்க்கு பெயரிடப்படுவதால் ஏன் ஒருவர் புண்பட வேண்டும். அவர்களின் லாஜிக் படி பார்த்தால், என்ன கொடுமை சரவணா என்ற டயலாக் கடவுள் முருகனை கேலி செய்வதா, இது இந்த ஊரடங்கு காலத்தில் சலித்து இருக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட தேவையற்ற சர்ச்சையை தவிர வேறொன்றுமில்லை என்று கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

11 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

11 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

11 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

12 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

12 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

13 hours ago