மார்கழி மாதம் நாம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளோம். அதற்கு அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளது. ஆன்மிக ரீதியாக தேவலோகத்தின் விடியற்காலை நேரம் தான் மார்கழிமாதம் . ஆதலால் நாம் மார்கழி மாதம் விடியற்காலையில் எழுந்து விடியற்காலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று வேண்டுகையில், கடவுள் அதிகாலையில் பக்தர்கள் வேண்டுவதை உடனே நிறைவேற்றுவார் எனபது ஐதீகம். அதனால் தான் பெரும்பாலானோர் மார்கழி மாதம் காலையில் கோவிலுக்கு செல்வதை வைத்துள்ளோம்.
அதேபோல, மார்கழி மாதம் வீட்டு கன்னிப்பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து பூசணி பூவை அதில் வைப்பார்கள். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அதாவது வீட்டில் உள்ள கன்னி பெண்கள் மட்டுமே முன் காலத்தில் வீட்டு வாசலில் கோலம் போட்டு வந்தனர். உற்றார் உறவினர்கள் அதனை வைத்துதான் இந்த வீட்டில் கல்யாணம் ஆகாத கன்னி பெண் இருக்கிறாள் என கண்டறிந்து மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்க செல்வார்களாம்.இந்த திருமணம் தை மாதம் கைகூடும் என்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இதற்கு அறிவியல் ரீதியாக காரணம் கூற வேண்டுமென்றால், மார்கழி மாதம் காற்றில் அதிகஅளவு ஆக்சிஜன் வாயு ஆனது அதிக அளவில் இருக்கும். அந்த மார்கழி மாதத்தில் விடியற்காலையில் எழுந்து காற்றில் உள்ள அதிகமான ஆக்ஸிஜனை சுவாசித்தால், அந்த ஒரு வருடத்திற்கான ஆக்சிஜனானது அந்த ஒரு மாதத்தில் கிடைத்துவிடுமாம். இதனால் முகப்பொலிவு இருக்குமாம். நம் உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும், மார்கழி மாதம் அதிகாலையில் பெண்கள் எழுந்து அந்த சுத்தமான காற்றை சுவாசித்தால் அவர்கள் முகம் பொலிவுறும். மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்த்தவுடன் பெண்ணை மிகவும் பிடித்துவிடுமாம். இதனால் திருமணம் கைகூடும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…