முதலில் தியேட்டரில்,பின்னரே அமேசான் பிரேமில் வெளியாகும் மாஸ்டர்.! மாஸ்டர் படக்குழுவினர் திட்டவட்டம்.!

Published by
Ragi

விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தினை பொங்கலன்று தியேட்டரில் தான் முதலில் வெளியாகும் என்றும்,அதன் பின்னரே அமேசான் பிரேமில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன்,சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது .இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.

தீபாவளி தினத்தன்று மாஸ்டர் படத்தின் டீசர் சன் தொலைக்காட்சியின் யூடுயூப் சேனலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுடன் , இந்திய அளவில் அதிக லைக்குகளை பெற்ற டீசர் என்ற சாதனையையும் படைத்தது.

ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த மாஸ்டர் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.சமீபத்தில் படத்தினை ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில்,அதனை மாஸ்டர் படக்குழு மறுத்தது .இந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கியதை தொடர்ந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்த சில படங்கள் தியேட்டரில் வெளியாகியது.

ஆனால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.இந்த நிலையில் தற்போது மீண்டும் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதாவது மாஸ்டர் படத்தினை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மாஸ்டர் படக்குழுவினர் கூறியுள்ளதாவது , மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக முதல் திரையரங்குகளில் தான் வெளியாகும் ,அதாவது பொங்கலுக்கு மாஸ்டர் படத்தினை தியேட்டரில் வெளியிட உள்ளதாகவும் ,அதன் பின்னரே ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதிலும் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் அல்லாமல் அமேசான் பிரேமில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனை கொண்டாடும் விதமாக தளபதி ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் #MasterOnlyOnTheaters என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

9 minutes ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

21 minutes ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

48 minutes ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

1 hour ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

2 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

2 hours ago