மாஸ்டர் இசை வெளியீடு.! இந்த முறை சென்னை இல்லையாம்.! குழப்பத்தில் ரசிகர்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் இடம் குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தில் ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, கைதி வில்லன் அர்ஜுன் தாஸ், நடிகை மாளவிகா மோகன் மற்றும் சாந்தனு, ஆண்ட்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். இதுவரை மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பை தூண்டியது. காதலர் தினத்தன்று மாஸ்டர் படத்தில் இருந்து விஜய் பாடிய குட்டி ஸ்டோரி என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது. இதனிடையே படத்தின் படப்பிடிப்புகள் பெருபாலும் முடிவடைந்ததாகவும், இன்னும் 10 நாட்களில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிடும் என்று படக்குழு தெரிவித்தது.

அதன்பிறகு படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகளை இயக்குனர் தொடங்க இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இதற்கிடையில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜயின் முந்தைய படங்கள் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் உரிய அனுமதி பெறுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சை எழுந்தன. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக நடிகர் சாந்தனு, அண்மையில் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்று பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இசை வெளியீட்டு விழா நடக்கும் இடம் குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

3 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

4 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

4 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

5 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

5 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

6 hours ago