சீனாவுக்குச் சொந்தமான பிரபல செயலியான டிக் டாக் சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவும் தடை விதிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்கர்களின் தகவல்களை டிக் டாக் செயலி மூலம் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் டிக் டாக் தடை செய்யப்படும் என கூறிய நிலையில், டிக்டாக்கின் அமெரிக்கச் செயல்பாடுகளை வாங்க மைக்ரோசாப்ட், பைட்டான்ஸ் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சமீபத்தில் கூறப்பட்டது.
நேற்று மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த பேச்சு வார்த்தைகளை நிறுத்தியுள்ளது எனவும், அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதாக கூறி வெள்ளை மாளிகை ஆதரவைப் பெற பைட்டான்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மைக்ரோசாப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மைக்ரோசாப்ட் , சீன தொழில்நுட்ப நிறுவனமான பைட் டான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை உறுதிப்படுத்தியது. டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…