ஒரே ஒரு பேஸ்புக் பதிவினால் கோடீஸ்வரியான ஹோட்டல் ஊழியர்..!

Published by
லீனா

அமெரிக்காவின் அட்லாண்டாவில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஜாஸ்மின் காஸ்டிலோவுக்கு 20 அமெரிக்க டாலர்களை டிப்ஸாக கொடுத்த பெண். 

பொதுவாகவே நாம் உணவகங்களுக்கு சென்று உணவு சாப்பிட்டால் அங்கு நமக்கு பரிமாறும் உணவக ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். சில சமயங்களில் நாமும் கூட கொடுத்திருப்போம். அந்தவகையில் இந்த டிப்ஸ் குறைந்தது பத்து ரூபாய் முதல் நூறு ரூபாய் வரை கொடுப்பதுண்டு. மேலும் சிலர், நமது மனதின் தன்மைக்கு ஏற்ப அதிகமாகவும் கொடுப்பதுண்டு.

இந்த நிலையில் அமெரிக்காவின் அட்லாண்டாவில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில் ஜாஸ்மின் காஸ்டிலோ என்ற பெண் ஊழியர் பணியாற்றி வருகிறார். அந்த உணவகத்திற்கு  ரிட்டா ரோஸ் என்ற பெண் தனது தாயாருடன் வந்து உணவருந்தினார். அவர்கள் இருவரும் சாப்பிட்ட உணவுக்கான பில் தொகை 30 அமெரிக்க டாலர்கள். அப்போது அந்த பெண் உணவு பரிமாறிய ஜாஸ்மினுக்கு 20 அமெரிக்க டாலர்களை டிப்ஸ் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ரீட்டா ரோஸ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் நானும் எனது அம்மாவும் IHOP உணவகம் சென்றிருந்தோம். அங்கு எங்களுக்கு உணவு பரிமாறிய ஜாஸ்மின் என்ற சப்ளையர் மிகவும் சிறப்பாக அவரது பணியில் ஈடுபட்டார். மிகவும் கனிவாக எங்களை கவனித்து பொறுமையுடன் உணவை பரிமாறினார். அவரது தொழில்முறை நேர்த்தியாக இருந்தது அதற்காக அவருக்கு இருபது டாலர் டிப்ஸ் கொடுத்தேன். அதை பெற்றுக்கொண்ட அவர் இந்த 20 அமெரிக்க டாலர் தனக்கான பெரிய உதவி என்றும் சொல்லியிருந்தார்.

இந்த பணி அவர் விருப்பம் இல்லாமல் செய்தாலும், தனது குழந்தை மற்றும் குடும்பத்திற்காக இந்த பணியை செய்து வருகிறார் என்பதை அறிந்து கொண்டேன் எனவே உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என பதிவிட்டு, ஜாஸ்மினின் ‘கேஸ் ஆப்’ விவரங்களையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவினை பார்த்த மற்ற முகநூல் பயனர்கள் ஜாஸ்மினின் கேஸ் ஆப் செயலிக்கு அமெரிக்க டாலர்களை அனுப்பத் தொடங்கினார். முதலில் சிறிய அளவு தொகையை மக்கள் அனுப்ப தொடங்கிய நிலையில், நாளடைவில், அவரது வாங்கி கணக்கில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் சேர்ந்துள்ளது.

இது குறித்து ஜாஸ்மின் கூறுகையில், எனது போனில் உள்ள கேஸ் ஆப் செயலியின் ரிங்டோன் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

Recent Posts

இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…

1 hour ago

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…

2 hours ago

தலைமை காஜி மறைவு…விஜய் முதல் இபிஎஸ் வரை இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று…

3 hours ago

தோனிக்கு இதுதான் கடைசி போட்டி…பண்டிகை மாதிரி கொண்டாடுங்க! வேண்டுகோள் வைத்த முகமது கைஃப்!

அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது.…

4 hours ago

ED-க்கும் பயமில்லை..பிறகு எதுக்கு உதயநிதியின் கூட்டாளிகள் தலைமறைவு? நயினார் நாகேந்திரன் கேள்வி!

சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று…

4 hours ago

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையில் ரொனால்டோ? ஸ்கெட்ச் போடும் முக்கிய அணிகள்!

அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை…

5 hours ago