நடிகர் விவேக் அவர்களின் மறைவுக்கு கோடிக்கணக்கான மரங்கள் கண்ணீர் சிந்தும் என நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் சூரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
காமெடி நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் புரோட்டா சூரி அவர்களும் தற்பொழுது நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நடிகர் விவேக் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு கொடூரமான சூழ்நிலை விவேக் அவர்களுக்கு வந்திருக்கக் கூடாது எனவும், அவர் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவர் ஒரு காமெடியன் அல்ல, அவர் தான் உண்மையான ஹீரோ எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சமூக ஆர்வலராக இருந்த விவேக்கின் மறைவிற்கு கோடிக்கணக்கான மரங்கள் கண்ணீர் சிந்தும் எனவும், நீங்கள் இந்த உலகம் உள்ளவரை எங்களோடு கூட இருப்பீர்கள் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…