தல அஜித் கொடுத்த பிரியாணி சர்ப்ரைஸ் குறித்து மனம் திறந்த மிர்ச்சி சிவா.!

Default Image

தல அஜித் கொடுத்த பிரியாணி சர்ப்ரைஸ் குறித்து நடிகர் மிர்ச்சி சிவா நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 

நடிகர் அஜித் குமார் தனது படங்களின் படப்பிடிப்பில் அவ்வப்போது, தன் கையால் பிரியாணி செய்து கொடுத்து சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது அவரது ஸ்டைல். அவரது படப்பிடிப்பு மட்டுமின்றி, தனது நட்பு வட்டாரத்துக்கும் அவ்வப்போது, பிரியாணிசர்ப்ரைஸ் கொடுப்பது அவரின் வழக்கம்.

இந்நிலையில், அவரது பிரியாணி சர்ப்ரைஸ் குறித்து நடிகர் மிர்ச்சி சிவா அண்மையில், ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் ரேடியோ மிர்ச்சி FM சேனலில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, திடீரென எனக்கு போன் செய்தார்.

ஆபிசில் எத்தனை பேர் வேலை செய்கின்றனர் என கேட்டார், நான் பதில் கூறியதும், ஒரு மணிநேரம் கழித்து, ஆபிசில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் பிரியாணி செய்து அனுப்பிவிட்டார். அந்த சமயம், ஆபிசில் வேலை செய்பவர்கள் இதற்கு முன்னர் கொடுக்காத மரியாதை அன்னைக்கு எனக்கு கிடைத்தது, எதோ சாதித்தது போல, அனைவரும் கட்டிப்பிடித்து பாராட்டினர்.” என தல அஜித் உடனான தனது நட்புறவை பேட்டியில் வெளிப்படுத்தினார்.

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் அடுத்ததாக சுமோ, இடியட், பார்ட்டி, ஆகிய திரைப்படங்கள் திரைக்குவரதயாராக இருக்கிறியாது.  மேலும், தற்போது யோகிபாபுடன் காசேதான் கடவுளடா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07052025
Operation Sindoor
Pakistan PM Shehbaz sharif say about Operation Sindoor
Operation Sindoor
MIvsGT - ipl
MK stalin
MI vs GT