டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். காற்று மாசினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், காற்று மாசு குறித்து விவாதிப்பதற்காக, நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டம் 15-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 29 எம்.பி-களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் 4 எம்.பிக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்து, கெஜ்ரிவால் அரசை கடுமையாக விமர்சனம் செய்த கவுதம் கம்பீருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை. இக்கூட்டம் நடைபெற்ற போது, கவுதம் கம்பீர் வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கு வர்ணனனையாளராக சென்றுள்ளார்.
இவரது இந்த செயலால் சமூக வலைத்தளங்களில் இவருக்கு எதிரான ஹேஸ்டேக்குகள் பதிவிடப்பட்டது. மேலும், மக்கள் பிரச்னை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது கண்டத்திற்குரியது என்று கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதனையடுத்து, டெல்லி ஐடிஓ பகுதியில், ‘இவரை காணவில்லை யாராவது பார்த்தீர்களா? என்ற வாசகத்துடன், அவரது புகைபபடத்தையும் அச்சிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…