நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவிகள்…!

Published by
லீனா

இருசக்கர வாகனங்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள், வகுப்புகளுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் மாணவிகளை சிறை பிடித்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் அட்டகாசம் பல இடங்களில் பெருகி வரும் நிலையில், நைஜீரியாவில் உள்ள போகோ ஹராம் பயங்கரவாதிகள் அங்கு வாழும் கிராமத்து மக்கள் மத்தியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பது மட்டுமல்லாமல்,  பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளையும் கடத்தி சென்று அவர்களை தற்கொலைப் படை பயங்கரவாதிகளாகவும் மாற்றிவிடுகின்றன.

இந்நிலையில் நைஜீரியாவின் வட மேற்குப் பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல், நேற்று முன்தினம் மாலை பள்ளியில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள், வகுப்புகளுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் மாணவிகளை சிறை பிடித்துள்ளனர்.

இந்த செயலால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், சில ஆசிரியர்களும் மாணவர்களும் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, அங்கு உள்ள காட்டுக்குள் சென்று மறைந்துள்ளனர். இந்நிலையில், பயங்காரவாதிகள் லாரிகளை வரவழைத்து மாணவிகளை ஏற்றிக் சென்றுள்ளனர்.

இது குறித்து பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டதாகவும், ஜங்கேபே கிராமத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு கடத்தி செல்லப்பட்ட மாணவிகளை மீட்பதற்கான பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நைஜீரியாவின் காட்சினா மாகாணத்தில் டிசம்பர் மாதம் இதே போன்று 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

42 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

1 hour ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

4 hours ago