இந்த படத்தை பார்த்து நானும் என் கணவரும் கண்ணீர் விட்டு அழுதோம் – மாஸ் நாயகி ஓபன் டாக்.!

Published by
பால முருகன்

இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த திரைப்படத்தை ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் கதையை வைத்து மையமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது . இந்த அற்புதமான படத்தை இயக்கிய இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.

இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு மத்திய பிரதேசத்தில் போலீசாருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த அனைவரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில், மாஸ் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த பிரணிதா படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பது ‘காஷ்மீர் பண்டிட்டுகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு அனுபவித்த இதயத்தை உலுக்கும் உண்மையை அறிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் பார்க்க வேண்டிய படம் தி காஷ்மீர் . படத்தின் முடிவில் நானும் என் கணவரும் கண்ணீருடன் இருந்தோம்.. நீங்கள் ஏற்கனவே பார்க்கவில்லை என்றால் தயவுசெய்து பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Recent Posts

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

16 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

39 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

1 hour ago

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

16 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

17 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

17 hours ago