ரஷ்ய பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அமெரிக்க மாணவி மர்ம மரணம்!

Published by
Rebekal

ரஷ்யாவில் உள்ள லோபசெவ்ஸ்கை பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கேத்தரின் எனும் அமெரிக்க மாணவி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

ரஷ்யாவில் உள்ள நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை என்னும் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 34 வயதுடைய கேத்தரின் எனும் அமெரிக்காவை சேர்ந்த மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென பல்கலைக்கழகத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். கடந்த வியாழக்கிழமை இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து கடைசியாக அந்த பெண்மணி தனது தாயாருக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். அதில் நான் கடத்தப்படவில்லை என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த செல்போனின் டவர் வைத்து விசாரித்த பொழுது மருத்துவமனைக்கு செல்வதற்காக சென்ற கார் காட்டுக்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெண்மணியின் செல்போன் அழைப்பு காட்டுக்குள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 40 வயதுடைய நபர் ஒருவரை தற்பொழுது விசாரணைக்காக போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பெண்மணி உயிரிழந்து விட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், என்ன நடந்துள்ளது என்பதை உன்னித்து கவனித்து வருவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

47 minutes ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

3 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

6 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

7 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

9 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago