அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு கடந்த மே மாதம் ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகியோரை விண்வெளிக்கு அனுப்பியது. இதன் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2 மாதங்களாக தங்கி ஆராய்ச்சி செய்து வந்த நிலையில், ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகிய இருவரும் கடந்த சனிக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புதிய க்ரூ டிராகனில் மூலம் சனிக்கிழமை பூமிக்கு புறப்பட்டனர்.
சுமார் 21 மணி நேரம் பயணம்செய்த நிலையில் இன்று அதிகாலை மெக்ஸிகோவின் வளைகுடா கடல்பகுதியில் இருவரும் தரையிறங்கினர். பின்னர் படகு மூலம் கடற்கரைக்கு இருவரும் அழைத்து வரப்பட்டனர்.
இவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஸ்பிளாஷடவுன் என்றுஅழைக்கப்படும் தண்ணீரில் தரையிறங்குவதை நாசா வெற்றிகரமாக செய்துள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…