மாமனிதன் படத்திற்கு தேசிய விருது நிச்சயம்- ஆர்.கே.சுரேஷ்.!

Published by
பால முருகன்

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் இருக்கிறது.

இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் இணைந்து இசையமைத் துள்ளார்கள். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.

மேலும், இந்த படம் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படம் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழகம் மற்றும் கேரள தியேட்டர் வெளியீட்டு உரிமையை நடிகர் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 கைப்பற்றியுள்ளது.

இந்த படம் குறித்து ஆர்.கே சுரேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் “நான் பார்த்து வியந்த படம் தர்மதுரை அதன்பின்பு இப்படி ஒரு படமா மாமனிதன் என்று வியந்தேன். நன்றிகள் பல இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு. மற்றும் மாமனிதன் மட்டுமல்ல மகா நடிகன் நீ விஜய் சேதுபதி என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தேசிய விருது நிச்சயம்” என தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

58 minutes ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

2 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

3 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

4 hours ago