மலையாள நடிகையான மஞ்சு வாரியர் சமீபத்தில் அளித்த பேட்டியில் லேடி சூப்பர் ஸ்டார் நயனதாராவை புகழ்ந்து பேசியுள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியர். கடந்த சில ஆண்டுகளாக முன்பு நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். ஆனால் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் பச்சையம்மாளாக நடித்து தமிழ் ரசிகர்களை பெற்றார்.தற்போது இவருக்கு பல தமிழ் பட வாய்ப்புகள் வருகின்றன. மேலும் பல பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறார். இவரை மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறலாம்.
இந்த நிலையில் சமீபத்தில் மஞ்சு வாரியர் அளித்த பேட்டியில் நயன்தாரா அவர்களை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில் தனது பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் நயன்தாரா பணியாற்றி வருவதை கவனித்து வருவதாகவும், அவரை போல் யாரையும் பார்த்தது இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நயன்தாரா அவர்கள் பல நடிகைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார். ஏனெனில் பெண்களாலும் வலிமையாக நிலைத்து நின்று சினிமா துறையில் சாதிக்க முடியும் என்பதனை நிரூபித்து உள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் தனக்கு பிடிக்கும் என்றும், அவரது சொந்த வாழ்க்கையை குறித்து தனக்கு அதிகம் தெரியும் என்றும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…