இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தற்போது சாத்தியமில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சமீப காலமாக நடத்தப்பட்ட பதன்கோட் விமான நிலைய தாக்குதல், யூரியிலுள்ள ராணுவ முகாம் தாக்குதல், புல்வாமா தாக்குதல் என தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்துவதால் இரு நாட்டு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று மத்திய அரசு உறுதியாகக் கூறி வருகிறது.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ஜெய்ஷ் முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி அளித்த பேட்டியில், இந்தியாவுடன் வெளிப்படையாகவோ, ரகசியமாகவோ பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்றும் தற்போது அதற்கான சூழலும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…