மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக சேர்ந்து மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்த மகிசாசூரனை வாதம் செய்ததை தான் நவராத்திரி விழா என கொண்டாடுகின்றோம்.
நம்மிடம் உள்ள நல்ல எண்ணங்களையும் , திறமைகளையும் , ஒன்று இணைத்து நம்மிடம் உள்ள கெட்ட எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரி விழாவாக பார்க்கப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வு கொலு வைப்பது.
சிலர் கொலு வைப்பதை பல வருடங்களாக செய்து வருவார்கள். அவர்களுக்கு தெரியும் எப்படி கொலு வைக்க வேண்டும். எந்த வரிசையில் கொலு பொம்மைகள் இருக்க வேண்டும் என அனைத்தும் அவர்களுக்கு தெரியும்.
புதியதாக வீட்டில் கொலு வைப்பவர்கள் இந்த முறைப்படி கொலு வைக்க வேண்டும். 3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் வரை வைக்கலாம். இந்த படிகள் மனிதனின் வாழ்க்கை உயர்ந்தது எனவும் , உலகில் உள்ள உயிரினங்கள் எப்படி படிப்படியாக தோன்றியது என்பதை உணர்த்தும் விதமாக இந்த கொலு படிகள் அமைகின்றன.
முதல் படியில்:
மரம், செடி, கொடி போன்ற ஓரறிவு கொண்டவை வைக்க வேண்டும்.
இரண்டாம் படியில்:
நத்தை, சங்கு போன்ற 2 அறிவு கொண்ட உயிரனங்கள் வைக்க வேண்டும்.
மூன்றாவது படியில்:
கரையான், எறும்பு போன்ற 3 அறிவு உயிரனங்கள் வைக்க வேண்டும்.
நான்காவது படியில்:
நண்டுக்கும், வண்டுக்கும் போன்ற 4 அறிவு உயிரனங்கள் வைக்க வேண்டும்.
ஐந்தாவது படியில்:
பறவைகள், விலங்கினங்கள் போன்ற 4 அறிவு கொண்டவை வைக்க வேண்டும்.
ஆறாவது படியில்:
மனிதன் , மனிதர்கள் கடைப்பிடிக்கும் பழக்கமான, திருமணங்கள், நடனம் ஆடுவது போல உள்ள பொம்மைகள் வைக்கலாம்.
ஏழாவது படியில்:
மனிதர்களில் உயர்ந்த மகான்களான விவேகானந்தர், வள்ளலார் பொம்மைகளை வைக்கலாம்.
எட்டாவது படியில்:
கடவுளின் அவதாரங்களான தசாவதாரம், அஷ்டலட்சுமி போன்ற பொம்மைகள் வைக்கலாம்.
ஒன்பதாவது படியில்:
முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லெட்சுமி தேவி ஆகியோரின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…