காஷ்மீர் மற்றும் குஜராத்தையும் சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்!

Published by
Rebekal

பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் குஜராத் பகுதிகளையும் இணைத்து பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் அண்மையில் அந்நாட்டின் புதிய மேப் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவின் பகுதிகளான காஷ்மீர் மற்றும் குஜராத்தில் ஜுனாகத் ஆகிய பகுதிகளை பாகிஸ்தானுக்கு சொந்தமாக பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார். இந்த வரைபடத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை இது நிறைவேற்றுவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆனால் பாகிஸ்தானின் இந்த வரைபடத்தை முற்றிலும் மத்திய அரசு நிராகரித்து இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், அரசியல் வரைபடம் என்ற பெயரில் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள வரைபடத்தை நாங்கள் பார்த்தோம். இது ஒரு அபத்தமான அரசியல் நடவடிக்கை எனவும், இந்தியாவின் குஜராத் மற்றும் எங்களின் காஷ்மீர் லடாக் யூனியன் பிரதேசங்கள் உரிமை கோருவதை எங்களால் ஏற்க முடியாது, இந்த வரைபடம் சட்டப்படி குற்றம், சர்வதேச நம்பகத்தன்மையில் இது இல்லவே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

17 minutes ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

36 minutes ago

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

8 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

10 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

13 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

14 hours ago