சீனாவில் புதிய வைரஸால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், 60 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவிலிருந்து தோன்றியதாகக் கூறப்படும் கொரோனா தொற்று நோயை தற்போது உலகம் முழுவதும் எதிர்த்துப் போராடி வரும் நிலையில் சீனாவில் தற்போது புதிய தொற்று நோயான tick-borne வைரஸ் அங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஜியாங்சுவின் தலைநகரான நாஞ்சிங்கைச் சேர்ந்த ஒரு பெண் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது தெரிய வந்ததும் அவரது உடலின் உள்ளே லுகோசைட், ரத்த பிளேட்லெட் சரிவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனிடையே ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்த வைரஸ் காரணமாக அன்ஹுய் மற்றும் கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வல்லுநர்கள் இந்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு உண்ணி மூலம் பரவியிருக்கலாம் என்றும் இந்த வைரஸ் தொற்று மனிதர்களிடையே பரவக்கூடும் என்றும் தெரிவித்தனர்.
ஜெஜியாங் பல்கலைக்கழகத்தின் கீழ் முதல் மருத்துவமனையின் மருத்துவர் ஷெங் ஜிஃபாங், மனிதனுக்கு பரவும் வாய்ப்பை கூற முடியாது என்று தெரிவித்தார். நோயாளிகள் இரத்தம் அல்லது சளி வழியாக வைரஸை மற்றவர்களுக்கு பரவும் என்றார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…