நோட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டிக்கிறோம். ரஷ்யா உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஐரோப்பிய கண்டத்தில் அமைதியை சீர்குலைத்துவிட்டது என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டுக்குள் தங்களது படைகளை அனுப்பும் எந்த திட்டம் தற்பொழுது வரை இல்லை.
நோட்டோ படைகள் உக்ரைனுக்குள் செல்லவில்லை. நோட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன. ஆனால், நோட்டோ ஆயுத உதவி செய்யவில்லை. உக்ரைன் நோட்டோவில் இல்லை என்பதால் உக்ரைனுக்கு நோட்டோ ஆதரவாக இராணுவ உதவிகளை தற்போது வரை செய்யவில்லை . ஆனால் படைகள் நட்பு நாடுகளில் எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் படைகளுக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம்.
நேட்டோ தலைவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். உக்ரைனுக்கு நேரடியாக நேட்டோ படைகளை அனுப்ப முடியாது. ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என தெரிவித்தார்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…